இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
283
காசு பணம் செலவழித்து கல்லோடு மண்சேர்த்து
- ஆசையினால் மனிதன் அமைப்பதெல்லாம் கலைக்கோயில்!
- மாசில்லா அன்பின் வடிவாக ஆண்டவன்
- காசினியிலே படைத்த கண்கண்ட திருக்கோயில்!
- ஈன்று வளர்த்து இரவு பகல் கண்விழித்து
- ஈயெறும்பு மொய்க்காமல் இன்னல் பல சுமந்து
- பாலூட்டி தாலாட்டி பரிவோடு ஆளாக்கி
- வாழவைக்கும் தியாகியாம் மாதாவே பெரியகோவில்!
- பெரியகோயில் என்றே உலகினில் எந்நாளும்
- பேர்பெற்று விளங்கும் கோயில்!
- அரியகோயில் ஜாதிமத பேதமின்றியே
- அனைவர்க்கும் உரிய கோயில்!
- தருமநெறி இதுவென்று நமக்கெல்லாம் உணர்த்தியே
- சன்மார்க்கம் வளர்க்கும் கோயில்!
- தாயெனும் தூய திருக்கோயிலைப் போற்றி
- வாயார வாழ்த்துவமே!
பெரிய கோயில்-1958
இசை : K. V. மகாதேவன்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்