பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298


பெண்: கோயிலுக்கு போயிநானும்
கும்பிட்டதும் என் மேலே
சாமி வந்து ஆடுனதாலே!-எங்குருவிக்காரா
தலையும் கலைஞ்சு போச்சுடா!


ஆண் :நீ கைவீசிப் போகையிலே கலகலண்ணு ஒசையிடும்!
கண்ணாடி வளையல் பூராவும்!-எங்குருவிக்காரி
ஒண்ணில்லாம ஒடைஞ்ச தென்னடி?


பெண்:நான் பொய் பேசப் போறதில்லே!-மச்சான்
ஒரு புத்தியில்லாகாலிப்பயல்
கையைப் புடிச்சு இழுத்ததால்!-எங்குருவிக்காரா
கலகத்துல ஒடைஞ்சு போச்சுடா!


ஆண் :ஆங்! அப்படியா! அவன் யாரு?
அவன் என்ன? அவன் எங்கே?
நீ காட்டு! நான் போட்டு!-சும்மா
கும்தளாங்கு குமுர்தகுப்பா!
ஷிங் ஷிணாகி டபுக்கு டப்பா!
குத்து! ஒருவெட்டு! ஒரு தட்டு!
ஆ ஹய்! ஆஹய்! ஆஹய்!


முல்லைவனம்-1955