பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


விவசாயி! விவசாயி!
கடவுள் என்னும் முதலாளி!
கண்டெடுத்த தொழிலாளி! விவசாயி! (விவசாயி)

முன்னேற்றப் பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணமுடையோன் விவசாயி! (விவசாயி)

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!
ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்!
உயரும் உன்மதிப்பு அயல் நாட்டில்! (விவசாயி)

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெருகாதோ சாகுபடி? (விவசாயி)

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி!
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேணும் எங்கும் ஒரே சின்னக்கொடி! -அது
பஞ்சம் இல்லையெனும் அன்னக் கொடி! (விவசாயி)


விவசாயி-1967


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்