பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கெஜல்

ஒற்றுமையின் சங்கநாதம் முழங்குதே! அது
வெற்றி வெற்றி என்ற சொல்லை வழங்குதே!

பாட்டு
பாடுபட்டால் பலனை யாரும்
பார்க்கலாமே கண்ணாலே!
பாலைவனம் உருமாறிடுமே
பசுஞ்சோலை போல தன்னாலே!

காடுமேடெல்லாம் நாடுநகரமாய்
ஆவதும் எதனாலே?
மாட மாளிகை கூட கோபுரம்
வளர்வதும் எதனாலே?
ஒடாகத் தேய்ந்த போதும்
உணவின்றிக் காய்ந்த போதும்
மாடாக உழைப்பவர் தொழிலாலே
இந்த மாநில மேலே! (பா)

நெத்தி வேர்வையை நிலத்தில் சிந்தினால்
நீர்வளம் உண்டாகும்!
முத்து முத்தாக முப்போகம் விளையும்
நெற்பயிர் உருவாகும்!
கொத்தாது பஞ்சமும் நம்மை!
குறையாது வாழ்வினில் செம்மை!
சொத்தாகச் சேர்ந்திடுமே நன்மை!
இது அனுபவ உண்மை. (பா)

வாழவைத்த தெய்வம்-1959

இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்