பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


நீ சிரிச்சா நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே!
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே!
(நீ சிரி)

தேன் மணக்கும் வாயிதழோ சிவப்பு மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண்மலரோ நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு-அதைக்
காணும் போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு
(நீ சிரி)

எட்டி எட்டி வட்ட நிலா உன்னைப் பாக்குது-உன்
எச்சில் பட்ட சோத்தை அது தனக்குக் கேக்குது!
சட்டமாகச் சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா-அந்தச்
சந்திரனை விளையாடக் கூப்பிடு அம்மா
(நீ சிரி)

பாவை விளக்கு-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: சூலமங்கலம் ராஜலட்சுமி