பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

ஜீவகன்: அரும்புதிர முத்துதிர அழகு சிரிக்குது
கரும்பு முகம் கண்டவுடன் கவலை பறக்குது?

ரத்னா: பிறந்த போது விருந்து வைக்கும் பெருமையில்லாது-பல
பெண்கள் வந்து தொட்டிலாட்டும் சிறப்பு மில்லாது
அருமையுள்ள ஆசைத்தந்தை அருகில் இல்லாது
வறுமையிலும் சிறுமையிலும் வாட்டம் கொள்ளாது
--(அரும்பு)

ஜீவகன்: குரலைக் கேட்ட எனது காதில் தேனும் பாயுது
இருந்த இடத்தை மறந்து மனம் எங்கோ தாவுது-அது
பறந்து பறந்து புதிய புதிய கனவு காணுது- பிள்ளைப்
பாசத்தினால் என் இதயம் ஆடிப்பாடுது
--(அரும்பு)

ரத்னா: தரம்மிகுந்த வைரமுடி தரையில் கிடக்குது
உரிமையுள்ள நெஞ்சம் அதை உணர்ந்து துடிக்குது
--(அரும்பு)