பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58


செல்லக்கிளியே செந்தாமரையே கன்னையா!-பேசும்
தெய்வச் சிலையே ஜீவச்சுடரே சின்னையா!-ஓ
தேடக் கிடைக்காத பொன்னையா!-நீ
செல்வச் சிறப்போடு வாழய்யா!

முல்லைநகை வீசி முத்தான மொழி பேசி நீயே!
துள்ளிவரும் காட்சி தோன்றுதே என்கண்ணில் சேயே!

நீலவிழி கொஞ்சும் நிலவு முகம் காணும்போது
நெஞ்சில் உருவாகும் இன்பநிலைக்கு ஈடேது!
உனக்கு ஈடேது!

அன்புப் பயிராக இன்ப நதியாக வந்தாய்!
பொங்கும் வளம்யாவும் எங்கள் மனைதன்னில் தந்தாய்

எதுவேண்டுமாயினும் உன்பாட்டன் தருவார் !
இதழூறும் முத்தங்கள் பெறுவார்!-தந்தை
கதை சொல்லுவார்-அன்னை
தாலாட்டுவாள்!-எங்கள்
கண்போல உனை என்றும் காப்பாற்றுவோம்!

பொன் விளையும் பூமி-1959

இசை : ரெட்டி
பாடியவர்: P. சுசிலா குழுவினர்