பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா!
ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம்
உண்டாக வேண்டுமடா!

எனது கண்ணே உனது தாயின்
சொல்லை நீ கேளடா! -தாயின்
சொல்லை நீ கேளடா! (எல்லோரும்)

பாலகா அதிகாலையில் விழிக்கும்
பழக்கம் வேண்டுமடா-என்கண்ணே
பள்ளி சேர்ந்தே நீ செந்தமிழைப் படிக்க வேண்டுமடா!
படிக்க வேண்டுமடா!
சொல்லைக் கேளடா!-தாயின்
சொல்லைக் கேளடா! (எல்லோரும்)

தெய்வந்தன்னை மறவாமல் நீயும்
வாழ வேண்டுமடா!-என் கண்ணே
தீய சகவாசம் பொய், களவை
விலக்க வேண்டுமடா!
சொல்லை நீ கேளடா!-தாயின்
சொல்லை நீ கேளடா! (எல்லோரும்)

பாக்கியவதி-1957

இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா