பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65


லதா: தந்தையாரோ தாயும் யாரோ?
நீயும் எந்த ஊரோ?
ஜாலக்காரா தூங்கடா!
ஆராரோ-நான் யாரோ-நீயாரோ! (தந்தை)

மணம் புரிந்து அரசும் வேம்பும்-நான்
வலம் வராத போதிலும்
மதலையாக வீடு தேடி
வந்ததென்ன விந்தையோ! (தந்தை)

மாலை சூடி லாலி பாடி
மனைவியாகக் கொள்ளும் முன்னே
ஏழு வயதுப் பிள்ளையாக
எனக்குத் தந்தார் உன்னை! (தந்தை)

வாலை சும்மா சுருட்டிக் கொண்டு
தூங்கடா நீ தூங்கு!
வம்பு செய்தால் உந்தன் கன்னம்
எந்தன் கையால் வீங்கும்! (தந்தை)

யார் பையன்-1975

இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்; P. சுசிலா