பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


ஆசைக் கிளியே! அழகுச் சிலையே!
அமுத நிலையே! செல்வமே!
வாச மலரே! பேசும் பிறையே:
வாழ்வின் நிதியே தூங்கடா!

மாசிலா ஒளி வீசப் பிறந்த
வைர மணியே இன்பமே!
வசந்த காலத் தென்றலே-என்
வாழ்வின் நிதியே தூங்கடா!

குழலும் யாழும் இனிமை தருமோ
மழலை இன்பம் போலவே!
கோடி கோடி செல்வ மெல்லாம்
குழந்தைக் கீடு ஆகுமோ?
வாழ்வின் நிதியே தூங்கடா!

பாக்கியவதி-1957

இசை: S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா