பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75


வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் வெண் புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே!
வா......வா......ஒடி வா......
(வசந்தமுல்லை)

இசையினில் மயங்கியே
இன்புறும் அன்பேவா!
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே!
(வசந்தமுல்லை)

சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே!
மந்திரக் கண்ணாலே, தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!

இந்திர வில் நீயே!
சந்திர ஒளி நீயே!
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே!
(வசந்த முல்லை)

சாரங்கதரா-1958

இசை : G. ராமநாதன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்