பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77


ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே-குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே!  (ஆயிரம்)

தென்றல் இசை பாடிவரும் தேனருவி ஆடிவரும்
அன்றலர்ந்த செண்பகப்பூ வண்ணக்கிளியே!-எங்கும்
ஆனந்தக் காட்சி தரும் வண்ணக்கிளியே!  (ஆயிரம்)

எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக்கிளியே! நெஞ்சில்
இன்ப நிலை தந்திடுதே வண்ணக்கிளியே!
பொங்கி வரும் ஐந்தருவி வண்ணக்கிளியே! இங்கே
சங்கத்தமிழ் முழங்கிடுதே வண்ணக்கிளியே!  (ஆயிரம்)

மந்தி யெல்லாம் மாங்கனியைப் பந்தாடி பல்லிளிக்கும்
சந்திரன் போல் சூரியனும் வண்ணக்கிளியே-குளிர்ச்சி
தந்திடுவான் இங்கு என்றும் வண்ணக்கிளியே  (ஆயிரம்)

பாவை விளக்கு-1960

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: C. S. ஜெயராமன்