பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84


பெண் : வண்டி உருண்டோட அச்சாணி தேவை!
என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை!  (வண்டி)

ஆண் : சொந்தம் கொண்டாடவென்று அன்பு கொண்டு
ஷோக்கு மாப்பிள்ளை வாராறே இன்று!
ஷோக்கு மாப்பிள்ளை வாராறே இன்று!

பெண் வந்தாலும் பலனில்லையே-அன்பைத்
தந்தாலும் அதை வாங்க ஆள் இல்லையே!  (வண்டி)

பெண்: நிலவைக்கண்டு மலரும் அல்லி
விளக்கைக் கண்டு மலருமா?
உலகம் கொண்டாடும் சூரியன் வந்தாலும்
உண்மை இன்பம் கொண்டாடுமா?

ஆண் : விளங்கும்படி சொல்லம்மா
வெண்ணிலவும் யாரம்மா?
வேலைக்காரன் எனக்கு அது புரியுமா? என்
வேலையை நான் பார்க்க வேணும் தெரியுமா? - சும்மா
விளையாட வேணாம் அதைக் கொடம்மா! கொடம்மா!

பெண்: வண்டி உருண்டோட அச்சாணி தேவை!
என்றும் அது போல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை!