பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91



ஆண் : தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடிக் கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

ஆண் : நீலஇரவிலே தோன்றும் நிலவைப் போலவே
வாலைக் குமரியே நீயும் வந்தபோதிலே!

பெண் : நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா?
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

ஆண் : இதய வானிலே இன்பக் கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே!

பெண்: வானம்பாடி ஜோடி கானம் பாடமயங்குமா?
வாசப் பூவும் தேனும் போல வாழத்