பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95


பெண் : என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?
இனி முடியுமா?-நாம்
இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா? தெரியுமா?
கண்ணுக்குள்ளே புகுந்து
கதைகள் சொன்ன பின்னே!
எண்ணத்திலே நிறைந்து! அதில்
இடம் பிடித்த பின்னே!
எந்தன் அன்னை தந்தை
சம்மதித்த பின்னே!
அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே!
ஓ ... ஓ ... ஓ ... ஓ ...

ஆண் : உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா?
இனி முடியுமா?-என்
உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா? தெரியுமா?
அன்னம் போல நடை நடந்து வந்து என்
அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
கன்னம் சிவக்க நீயிருக்க மஞ்சள் கயிறு எடுத்துனது
கழுத்தில் முடிக்கும் இன்பநாள் தெரியும் போது
ஆ... ஆ... ஆ... ஆ...