பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 to அகத்திணைக் கொள்கைகள் பாடல் பெத்துத் திகழ்கின்றது. இது கற்புடைய காதற் கனவாதலின் அளவு பாடல்கள் காலங் கடந்த இலக்கியமாய் இலக்கணமும் அமையப்பெற்று அழியா வாழ்வு பெற்றன. பெற் சிே முடிக்கும் திருமணப் புணர்ச்சியில் காதலர்க்கு இலச்ச்சியும் விறுவிறுப்பும் இல்லை; இதனால் புலவரின் இடம் இல்லை; எண்ணத் துடிப்பும் இல்லை. சங்கச் சான்றோர்கள் ஆற்றொழுக்கு போன்ற இயல்பு பாபுவழி தோன்றும் மணத்தை-பாட முன் வரவில்லை. -- ான்றோர் பாடியதனால் களவு நெறி உயர்ந்தது என்றோ. அவர்கள் பாடல் பெறாமையால் மரபு நெறி தாழ்ந்தது என்றோ, கொள்ள வேண்டா. இரண்டையும் சமுதாயம் ஒன்று போலவே கருதுகின்றது. பேராசிரியர் மு. இராகவ அய்யங்கார் அவர்கள் ளொழுக்கமின்றியே தனிக் கற்பு முன்பு வழங்கியதில்லை’ என்று கறி மேற்குறிப்பிட்ட இறையனார் களவியல் நூற்பாவினை சான்றாகக் காட்டுவர். இஃது ஏற்றுக் கொள்ளத் தக்க கருத்து த் தோன்றவில்லை. களவு வழியாகத்தான் கற்பு அமை து என்ற ஒரே வழி நிலவியிருப்பின் மகள் தன் களவைப் பெற்றோர்க்கு மறைக்க வேண்டியதில்லை. உடன்போக்கினை மேற் கொள்ள வேண்டியதுமில்லை. கற்புக்குக் களவு இன்றியமையாத தெரியாயின் களவினை மறை என வழங்க வேண்டியதில்லை. களவாளர்கள் தம் மறை யொழுக்கம் புலனாகி விடுமோ என்று சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் அஞ்சினதாகவே பாடல்கள் காணப்படுகின்றன. வெறியாட்டு, அறத்தொடு நிற்றல் என வரும் ஒவ்வொரு கட்டத்திலும் காதலர்களிடையே இவ்வச்ச உண்ர்ச்சியைக் காணலாம். மறையொன்று நிகழ்ந்ததாகப் பிறர் அரியாமலேயே மணம் நடந்துவிட வேண்டும் என்று தோழி தலைவனை வரைவு முடுக்கம் செய்கின்றாள்; பல்வேறு விதமாக வரைவு கடாவும் பாடல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன. § {. 、リ கழியக் காதல ராயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் வரையின் எவனோ வான்தோய் வெற்ப! கணக்கலை இகுக்கும் கறியிவர் சிலம்பின் மணப்பரும் காமம் புணர்ந்தமை அறியார் தொன்றியல் மரபின் மன்றல் அயர." 18. அகம்-112.