பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

发5意 அகத்தினைக் கொள்கைகள் இவ்வாறு நடைபெறும் நிகழ்ச்சிகளை யெல்லாம் இப் பிரிவில் அடக்கினும் இழுக்கொன்றுமில்லை. பொருட் பிணிப் பிரிவு: பொருள் காரணமாகப் பிரியும் பிரிவு பொருட் பிணிப் பிரிவாகும். இது பொருள்வயிற் பிரிவு என்றும் வழங்கப்பெறும். பொருள் இல்லாக் குறையால், பொருள் திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தால், தலைவன் பிரிகின்றான் என்று கருத வேண்டியத்ல்லை. தன் பெற்றோர் ஈட்டிய பொருளும் குடிவழியாகப் பெற்ற செல்வமும் ஏரளமாக அவனிடம் இருந்தாலும், அவற்றைத் துய்ப்பது ஆண்டன்மைக்கு இழுக்காகும் என்று கருதியும், தனது முயற்சியால் ஈட்டிய பொருளைக்கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும் என்று எண்ணியும் பிரிவான். அன்றியும் தன் முன்னோர் சேமித்த தாயப் பொருளைக்கொண்டு தேவர் காரியமும் பிதிரர் காரியமும் செய்வித்தால் தேவர்களும் பிதிரர்களும் இன்புறார் என்பது அக்காலத்தினர் கொள்கை. தானே தன் முயற்சியால் பொருள் ஈட்டி அதனைக்கொண்டு இச் செயல்களை ஆற்றுவித்தால் தனக்குப் பெருமை ஏற்படுவதுடன் தேவர்கட்கும் பிதிரர்கட்கும் இன்பம் உண்டாகும் என்ற கருத்தால் பொருளீட்டப் பிரிவான். இன்று கூடப் பொதுவாக எல்லாப் பகுதிகளிலும், பெரும்பாலும் செட்டி நாட்டுப் பகுதி களிலும், பணம் ஈட்டுவதற்காகப் பலர் வெளிநாடு செல்வதைக் காண்கின்றோம். ஏராளமான செல்வத்தில் புரளும் செல்வர்களும் பொருள் தேடலின் நிமித்தம் வெளிநாடு செல்வதைக் காண்கின் றோம், இவர்கள் எல்லோரும் எந்த நோக்கத்தின் பொருட்டுப் பொருள் தேடுகின்றனர் என்பதைக் கூறவியலாவிடினும், பொருள் தேடச் செல்லுகின்றனர் என்பது மட்டிலும் தெரிய வருகின்றது. பரத்தையிற் பிரிவு : பரத்தையிற் பிரிவு என்பது பொதுப் பெண்டிற் மாட்டுப் பிரியும் பிரிவு. இணைவிழைச்சு காரணமாகத் தலைவன் அவர்களை நாடிச் சென்றான் என்று எண்ணவேண்டிய தில்லை. தலைமகளைவிட்டு அப்பொதுப் பெண்டிரின் ஆடல் காண்பதற்காகவும் பிரிவான் என்று கருதுதல் வேண்டும். இக்காலத்தில் எத்தனையோ இசை நிகழ்ச்சிகட்கும் நாட்டிய நிகழ்ச்சிக்கும் பலர் செல்வதைக் காண்கின்றோம். இவர்கள் யாவரும். எந்நோக்கத்திற்காக அவ்விடங்கட்குச் செல்கின்றனர் என்பதை அறிவோம். சிலர் அவற்றைக் கண்டும் கேட்டும் சுவைப்பதற்காகச் செல்லுகின்றனர்; சில ர் பெருமைக்