பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 அண்ணல் அநுமன்

(ம) "இந்த நிலையில் துகிலில் பாதுகாப்பாகப் பொதிந்து வைத்திருந்த சூளாமணியை எடுத்து அடியேனிடம் சேர்ப்பித்தாள். அதனை நின் திருக்கண்கள் மகிழக் காண்பாயாக’ என்று மொழிந்து சிரஞ்சீவியான மாருதி இராமனிடம் கொடுத்தான்.

இதுகாறும் கூறியவற்றால் உய்த்துள காலமெல்லாம் புகழொடும் ஓங்கி நிற்கும் அதுமன் சிறந்த தூதனாகச் செயற்பட்டதை அறிந்து மகிழ்கின்றோம்.

"தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றும்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.'

55. குறள் - 688 (துரது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/131&oldid=1361301" இலிருந்து மீள்விக்கப்பட்டது