பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 அண்ணல் அநுமன்

"ஒதம் ஒத்தனன் மாருதி

அதன.அகதது உறையும நாதன் ஒத்தனன் என்னிலோ

துயில்கிலன் நம்பன் வேதம் ஒத்தனன் மாருதி

வேதத்தின் சிரத்தின் போதம் ஒத்தனன் இராமன்வேறு

இதனில்லை பொருவே"' (ஒதம் - கடல் நாதன் - திருமால் வேதத்தின் சிரம் - உபநிடதம் போதம் - பரம்பொருள்)

இங்கு அநுமனது இராமபக்தியை இணை இணையாக ஒப்பிட்டுக் காட்டி, தன்னை மறந்த நிலையில் தனது பக்தியின் அருமையையும் அற்புதமாகக் காட்டுகின்றான், கம்பன்.

பக்தியின் சிறப்பு : முதற்போர் நடைபெற்ற பொழுது ஒருநிலையில் இராவணன் இலக்குவன்மீது வேற்படையை எறிகின்றான். அஃது அவன் மார்பிற் பாய அவன் அயர்ந்த நிலையில் உள்ளான். அவனுடலைத் துக்கிச் செல்வதற்காக "நஞ்சினால் செய்த நெஞ்சினான் நடந்தான்.”* வந்தவன் தனது இருபது கைகளினாலும் இலக்குவன் உடலைத் துக்க முயலுகின்றான்.

"வெள்ளி யங்கிரி எடுத்தனன்

வெள்கினான் என்ன எள்ளில் பொன்மலை எடுக்கலுற் றானென எடுத்தான்.""

(எள் இல் - குற்றமற்ற) துக்க முடியவில்லை.

"தொடுத்த எண்வகை மூர்த்தியைத்

துளக்கிவெண் பொருப்பொடு எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான்'

27. யுத்த முதற்போர் - 227 28. யுத்த முதற்போர் - 208

29. யுத்த. முதற்போர் - 209 30. யுத்த முதற்போர் - 209

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/141&oldid=1361319" இலிருந்து மீள்விக்கப்பட்டது