140 அண்ணல் அநுமன்
"ஒதம் ஒத்தனன் மாருதி
அதன.அகதது உறையும நாதன் ஒத்தனன் என்னிலோ
துயில்கிலன் நம்பன் வேதம் ஒத்தனன் மாருதி
வேதத்தின் சிரத்தின் போதம் ஒத்தனன் இராமன்வேறு
இதனில்லை பொருவே"' (ஒதம் - கடல் நாதன் - திருமால் வேதத்தின் சிரம் - உபநிடதம் போதம் - பரம்பொருள்)
இங்கு அநுமனது இராமபக்தியை இணை இணையாக ஒப்பிட்டுக் காட்டி, தன்னை மறந்த நிலையில் தனது பக்தியின் அருமையையும் அற்புதமாகக் காட்டுகின்றான், கம்பன்.
பக்தியின் சிறப்பு : முதற்போர் நடைபெற்ற பொழுது ஒருநிலையில் இராவணன் இலக்குவன்மீது வேற்படையை எறிகின்றான். அஃது அவன் மார்பிற் பாய அவன் அயர்ந்த நிலையில் உள்ளான். அவனுடலைத் துக்கிச் செல்வதற்காக "நஞ்சினால் செய்த நெஞ்சினான் நடந்தான்.”* வந்தவன் தனது இருபது கைகளினாலும் இலக்குவன் உடலைத் துக்க முயலுகின்றான்.
"வெள்ளி யங்கிரி எடுத்தனன்
வெள்கினான் என்ன எள்ளில் பொன்மலை எடுக்கலுற் றானென எடுத்தான்.""
(எள் இல் - குற்றமற்ற) துக்க முடியவில்லை.
"தொடுத்த எண்வகை மூர்த்தியைத்
துளக்கிவெண் பொருப்பொடு எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான்'
27. யுத்த முதற்போர் - 227 28. யுத்த முதற்போர் - 208
29. யுத்த. முதற்போர் - 209 30. யுத்த முதற்போர் - 209