பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

9


யாவையும் வழங்குகின்றனர்,வேலை வாங்குவதில் மட்டும் விழிப்போடு விளங்குகின்றனர்.

உழைப்பில் ஈடுபடாத உடல், இயக்கமற்று, எல்லாவித நோய்களுக்கும் எழிலான தொட்டிலாகப் போய், அப்படி விழுந்த மக்களைக் கட்டிலிலே படுக்க வைத்து, கலங்க விட்டு கடைசியில், நடமாடும் சவமாக்கி விடுகிறது என்பதை அனுபவப்பட்ட பிறகும் மறந்து போய் விடுகிறார்கள் மக்கள். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

இதை மறதி என்பதா? அறிவற்ற மதமதர்ப்பு என்பதா? இதுதான் நாகரீகம் என்பதா? இப்படி வாழ்ந்தால்தான் பிறர் நம்மைப் போற்றுவார்கள் என்று எண்ணுவதா?

ஒன்று மட்டும் நமக்கு நன்றாகப் புரிகிறது.

‘வாழ்க்கையின் மகிழ்ச்சிக்குப் பொருள் இருந்தால் போதும்’ என்கிற கருத்திலேதான், மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளார்கள்.

பொருளைத் தேடத்தான் அவர்களுக்குப் புத்தி வேலை செய்கிறதே தவிர, உலகிலே உயர்ந்த பொருளாக நாம் பெற்றிருக்கும் உடலைப் போற்றி வாழவேண்டும் என்ற உண்மையை புரிந்து கொள்ளவே அவர்கள் விரும்புவதில்லை. அப்படிப்புரிந்து கொண்டாலும் நடைமுறைப் படுத்திக் கொள்ளவும் விரும்பவில்லை.

எந்திரங்களை தங்கள் வேலைக்காரர்களாக வைத்துக் கொள்ளும் மக்கள் முயற்சியின் முனை, இன்று முறிந்து போய் கிடக்கிறது. ஆள விரும்பிய அவர்கள், எந்திரங்களுக்கு அடிமையாகிவிட்டதுதான்,மனித சரித்திரத்தின் அவலமான அத்தியாயமாகிவிட்டது.