பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

உடற்கல்வி என்றால் என்ன?


ஆனால் வில்லியம்ஸ் என்பவர் இக்கருத்தை அதிகமாக வலியுறுத்திக் கூறியதாவது பின்வருமாறு.

உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது அதாவது அஜீரணக் கோளாறு வந்துவிட்டால், இரத்தத்தில் ஹீமோ குளோபின் சத்து குறைந்துவிட்டால், அல்லது சுரப்பிகளில் ஏதாவது ஒன்று செயலற்றுப்போனால், உடல் நிலை நிச்சயம் பாதிக்கப்படுகிறது. அப்போது, மனமும், பாதிப்புக்குள்ளாகி, ஒரு படபடப்பு நிலைக்கு ஆளாகி போகிறது. எனவே, மனமும் உடலும் ஒன்றுக் கொன்று உறுதுணையாகவே இருந்து, உயிர்ப்பாகப் பணியாற்றுகிறது.

ஹெர்ரிக் (Herric) என்பவரின் கருத்து. “நாம் மனம் என்பதை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு சிந்திக்க முடியாது. மனம் என்பது ஒரு பெயர். அதுதணியாக இயங்கிவிடமுடியாது.தனிப்பட்ட ஒருவரின் செயலுக்கு அது துணையாக நிற்கிறது அவ்வளவுதான். ஒரு குழந்தை பள்ளிக்குப் போகிறது என்றால், அது உடலையும் மனதையும் முழுதாகக் கொண்டு செல்கிறது என்று தான் அர்த்தம். அந்தக் குழந்தை கற்கிற கல்வியும் உடலையும் மனத்தையும் ஒரு சேர வளர்க்கிறது. ஒன்றை மட்டும் அல்ல” என்பதை நாம் நன்றாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கருத்தையே ரூரோ என்பவரும் வலியுறுத்திக் கூறுகிறார். ‘மனதுக்கு மட்டும் நாம் பயிற்சியளிக்க வில்லை. உடலுக்கு மட்டும் நாம் பயிற்சியளிக்கவில்லை. உடலுக்கு மட்டும் தனியாகப் பயிற்சி தரவில்லை. இரண்டுக்கும் சேர்த்தே பயிற்சியளிக்கிறோம்.