பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

239



கற்பவர்கள் மனதில் களிப்பு, தன்னம்பிக்கை, ஏற்படுமாறு கற்றுத்தருவதில் கவனம் செலுத்திக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு கற்கிறோம் என்பதில் தேர்ச்சி ஏற்பட்டு விடாது. எவ்வளவு பயிற்சி செய்து பழகிக்கொள்கிறோம் என்பதால் மட்டுமே திறமையும் தேர்ச்சியும் வளர்கிறது என்பதுதான் முக்கியமான கருத்தாகும்.

பயிற்சியில் குறைவு இருந்தாலும், பயிற்சிகள் தொடராமல் விடுபட்டுப் போனாலும் எதிர்பார்த்த விளைவுகள், மேலும் தொடராது போய்விடும். அது போலவே, ஆர்வக் கோளாறு காரணமாக அதிகமாக முயற்சிகள் மேற்கொண்டாலும், அவையும் வளர்ச்சியைப் பாதித்து விடும்.

எனவே, பயிற்சி நேரங்களைத் திட்டமிடல் வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு செயலுக்குரிய அடிப்படைத் தேவையை அறிந்து, அதையும் குறிப்பிட்ட நோக்கத்துடனே பயிற்சி செய்ய வேண்டும்.

பயிற்சியைத் தொடர்து, ஒழுங்காக செய்து வர வேண்டும். பயிற்சிக்கிடையே ஒய்வு தருவது நல்லது.

பயிற்சிகளானது தவறுகளைக் களைந்துவிட உதவுகின்றன.

தவறான பயிற்சிகள் தவறான முடிவுகளைத் தருவதால், பயிற்சி நேரங்கள், பழுதான முயற்சிகளைப் புறம் போக்கிடவழி வகுக்கின்றன.

பயிற்சிகளை அதிக நேரம்செய்யக்கூடாது.களைப்பு வருவதுபோலவும் பயிற்சிகளை செய்யக்கூடாது.