பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 267 படர்மலி யருநோயின எமக்குச் செய்தொழுகுகின்றன் அவன் பொருட்டு வாயில் வேண்டுவ தென்னே எ. அ. பரிதல், அறுத்துக்கோடல்; ' சேற்றுகிலே முனேஇய செங்கட் காான், ஊர்மடி கங்குலின் தோன்றளை பரிந்து, கூர்முள் வேலி கோட்டின் நீக்கி" (அகம். 48) எனச் சான் ருேர் தெரிக்குமாறு காண்க. நாண்மேயல் விடியற்காலத்திற் பெறும் மேய்ச்சல் நாளிரை, நாளுணவு என்பன போல, ' இருவெதி ரீன்ற வேற்றிலக் கொழுமுளை, குன்முதிர் மடப் பிடி நாண்மேய லாரும் ' (நற். 116) எனப் பெரியோர் வழங்குமாறறிக. பரத்தைமையால் இரவுப் போதில் வாரா மையே பன்றி, உண்டிக்காலமாகிய பகற்போதிலும் தலை வனது வாராமை உணர்த்திகிற்றலின், உம்மை இறந்தது தழஇேயிற்று. முற்றுதல், சூழ்தல். படர்மலி யருகோய், பல காலும் கினைப்பெழுதலால் உளதாகும் பொறு த்தற்களிய நோய்; இது சான்றேர் உரைகளில் ' தன்னுதற் பசந்த படர் மலி பருநோய்' (கற். 322) எனவும், 'படர்மலி யெவ்வ மொடு மாதிரத் துழைஇ’ (அகம். 189) எனவும் வருதல் 安部”öf子。” தோழி முதலிய அகம்புகு மரபின் வாயில்கள் விலக்க வும் அடங்காது புறத்தொழுக்கமே விரும்பித் தலைமகன் இாவிற் பிரிந்தொழுகியதல்ை, படர்மிகுந்து தான் வருந்தி யிருந்ததனே உள்ளுறையாற் குறித்தவள், ' இரவுக்காலத்து அவன் வாாள்மையால் எழுந்த வருத்தத்தை, உண்டிகோடற் குப் பகற்காலத்து வருதலால் ஆற்றியிருந்தேன்; இனி அது வும் ஒழிந்தமையால் ஆற்றேனுயினேன் ' என்பாள், பகலும் படர்மலி யருநோய் செய்தனன் என இனத்து கூறினுள். வாாாமையாகிய வினே அவன்பால் நிகழ்ந்ததாயினும், அதன் பயனுய் விளையும் துன்பம், இரவும் பகலும் முறுகிப் பெருகிப் ப்ொறுத்தற்கரிய துன்பத்தைப் பயப்பதாயிற் றென்றற்கு, படர்மலி யருநோய் என்றும், அதுதானும் அவன் வந்தவழி அருகுதலும்; வாராவழிப் பெருகுதலும் செய்தலின், அங்