பக்கம்:கல்வி எனும் கண்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி எனும் கண்

13



தெளிந்த பாடத்தினை எடுத்துக் கொண்டு, அவரிடமே முறையாகப் பயின்று, நூல் நிலையத்தினை நன்கு பயன்படுத்தி, தக்க வகையில் சில விடங்களில் ஆண்டு எல்லை கூட இன்றிப் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். அவர்தம் தெளிந்த புலமையை உலகம் வியந்து போற்றுகின்றது. இது நம்நாட்டுப் பழக்காலக் குருகுல வாக்கையினையே நினைவூட்டுகிறதன்றோ! அங்கே தமிழும் அந்த வகையிலேயே பயிற்றப்பெறுகின்றது. ‘ஒளவையார்’ பாடல்கள் ஒன்றனையே பாடமாகப் பெற்று, ஒரே ஆசிரியரின் கீழ்ப் பட்டம் பெறப் பயின்றவரை நான் கண்டேன். அப்படியே டாக்டர் பட்டம் பெறுவதும் ஆழ்ந்து பயின்று தெளிந்தாலன்றி இயலாது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தே தமிழ்நாட்டுப் பொருள் பற்றிய (worship of Sun God in Tamilnadu during nineth century) கட்டுரை ‘எம்.எ.’ வகுப்பிற்கு ஆய்வுக் கட்டுரையாக அமைய, பல தேர்வாளர்களோடு நானும் ஒருவராய் இருந்தேன். நில நூல், தமிழ், வானநூல் போன்ற பல நூல்கள் கற்ற பல துறையினர் 36 பேர் கூட்டி, அந்தக்கட்டுரையை ஆராய்ந்து, கேட்ட கேள்விக்ளுக்கெல்லாம். அந்த மாணவி பதில் அளித்தார். சிறந்த வகையில் அமைந்ததால் பட்டமும் பெற்றார்.

இங்கே டாக்டர் பட்டத் தேர்விற்கு அம்மாணவரின் மேற்பார்வையாளரே முக்கிய தேர்வாளர். அவருக்கு வேண்டிய வேறு இருவர் உடன் தேர்வாளர்கள். பின் எதை எழுதினும் பட்டம் பெறத் தடை என்ன?

எங்கள் கல்லூரியில், தமிழில் முதல் வகுப்பில் தேறிய ஒருவர் தமிழாசிரியராக இருந்தார். ஒரு நாள் அவரை அழைத்து, ‘வாக்குண்டாம்’ என்ற நூலைப் பற்றி ஏதேனும் தெரியுமா என்று கேட்டேன். ஆமாம் ‘வாக்குண்டாம் நல்ல மன்முண்டாம்’ என்ற பாடல் இருக்கிறது என்று யோசித்துச் சொன்னார். ஆனால் அந்த நூலைப் பற்றியோ அதன் ஆசிரியரைப் பற்றியோ அவ்ர் எழுதிய வேறு நூல்களைப்