பக்கம்:கல்வி எனும் கண்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கல்வி எனும் கண்



பற்றியோ ஒன்றும் தெரியவில்லை. நல்லவேளை அவர்கள் இப்போது பணியில் இல்லை.

ஒருமுறை தேர்வாணையத்தில் கல்லூரி ஆசிரியரைத் தேர்வு செய்யும் பணிக்கு அழைக்கப்பெற்றேன். அங்கே வந்த ஒருவர் ‘எம்.ஏ.’ வகுப்பில் சைவ இலக்கியங்களைச் சிறப்புப் பாடமாக எடுத்திருந்தார். எனவே நான் அவர்களை நோக்கி, முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர் யார்? என்று கேட்டேன். உடனே தயக்கமில்லாமல் ‘திருநாவுக்கரசர்’ என்றார். உறுப்பினர் அனைவரும் சிரித்தனர். என் பக்கத்திலிருந்த முகமதிய உறுப்பினர் ‘ஐயா, எனக்குத் தெரிகிறதே, இவர்களுக்குத் தெரிய வில்லையே’ என்று வருந்தினார். அந்த ஆண்டு அவரைத் தேர்வு செய்யவில்லை. எனினும் அடுத்த ஆண்டு எப்படியோ இடம்பிடித்து, இப்பொழுது ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். இதுபோன்று எத்தனையோ சான்றுகள் காட்ட முடியும்.

தமிழில் மட்டுமின்றி பிறமொழிகளிலும் பிறபாடங்களிலும் இதே நிலையினைக் காண முடிகின்றது. எங்கள் கல்லூரி, பள்ளிகளுக்கு வரும் விண்ணப்பங்களைப் பார்த்தால் மயக்கம் வந்துவிடும். ஆங்கிலத்தில் சிறப்பு நிலையில் 80% மேல் எண் வாங்கிய ஒருவர் எழுதிய விண்ணப்பத்தில் குறைந்தது ஐந்தாறு சாதாரணப் பிழைகள் இருக்கும். அப்படியே தமிழ் பயின்றவர்கள் நேர்முகத் தேர்வில் சங்கப் பாடல்களில் சாதாரண கேள்விகள் கேட்கும் போதுகூட, பதில் சொல்ல முடியாது திணறுவார்கள் இத்தகைய ஆசிரியர்களிடம் பாடம் பயிலும் மாணவர்கள் எப்படி வல்லுநர்களாக-நாட்டின் பெருமையைக் கட்டிக்காப்பவராக வரமுடியும்? நாடாளும் நல்லவர் இந்த நிலையினை எண்ணிப் பார்க்கவேண்டும்.

நாட்டில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி போன்றவற்றிற்கெல்லாம் நூற்றுக்கு 70, அல்லது 80 வாங்க