பக்கம்:கல்வி எனும் கண்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேநிலை வகுப்பு (+2)

67


செயலாற்ற முனையின் நாட்டின் பல பிரச்சினைகள்.உடனே தீரும். அரசாங்கம் செயலாற்ற வேண்டும்.

இதன் தேர்வு நிலைபற்றிச் சிறிதே எண்ணவேண்டும். 10+2+3 என்ற நிலையினைக் கல்வியில் வரையறுத்தபோது அத்தனை ஆண்டுகள் கட்டாயம் பயிலவேண்டும் என்ற விதியினை வற்புறுத்தினர். அப்போதுதான் கல்வி நிறைவு பெற்றதாகும். எனவே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இரண்டாண்டுகள் கழித்தே மேநிலையாகிய ‘+2’ தேர்வு எழுதவேண்டும். அதன் பிறகே கல்லூரிகளில் இடம் தேடும் நிலை, ஆனால் தேர்வு விதிகள் அந்த வகையில் இல்லை என்கின்றனர். மார்ச்சில் பத்தாம் வகுப்பு அல்லது. மெட்ரிகுலேஷன் தேறினால் உடன் அடுத்த செப்டம்பரிலேயே (ஆறு மாதத்தில்) தனியாகச் செல்பவர் மேநிலைத் தேர்வு எழுதலாம். பெரும்பாலான மாணவர்கள் பெருந்தொகை செலவு செய்து பள்ளிகளில் இரண்டாண்டுகள் பயின்ற பின்பே தேர்வு எழுதும் முறை இருக்க, இப்படிக் குறுக்கே ஆறே மாதத்தில் அத்தேர்வினை முடிக்க விதி உள்ளது பொருத்தமாகுமா? அத்துறையில் விதி உள்ளமையின் தாங்கள் தடுக்க முடியாதே என அஞ்சுகின்றனர். அவ்வாறு தேர்வு எழுதி வெற்றிபெறும் மாணவர்களைப் பொறியியல் கல்லூரி போன்றவை ஏற்றுக்கொள்ளா. இவ்வாண்டுமுதல் சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என விதி செய்துள்ளது. ஆக அவர்கள் அவ்வாறு சுருங்கிய எல்லையில் தேர்வில் வெற்றி பெற்றும் மேலே பயில வாய்ப்பு இல்லையே. (பல்கலைக் கழகங்கள் அஞ்சல்வழிக் கல்விக்கு இவர்களை ஏற்றுக்கொள்ளும் போலும்).

முறையாக இரண்டாண்டு பள்ளிகளில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றவர்களுக்கு மாறாக, இந்தக் குறுக்குவழி இருத்தல் ஏற்புடைத்தாகாது. இது மற்ற மாநிலங்களில் ஒரு வேளை இருந்தாலும் தவறே. எனவே நம் தமிழக அரசு உடன் இந்தக் குறுக்கு வழித் தேர்வினை நிறுத்த ஏற்பாடு செய்ய