பக்கம்:கல்வி எனும் கண்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கல்வி எனும் கண்



மன்னிக்கவும் எங்கோ சென்றுவிட்டேன். ஊர்தோறும் -தெரு தோறும் அந்தந்தக் கிராமத்தில் கற்றவர்களைக் கொண்டு-அவர்களுக்குச் சிறிதளவு ஊக்கத்தொகை கொடுத்து பிள்ளைகளுக்குக் கல்வி தரச் சொன்னால் பயன் விளையும் என நம்புகிறேன். நான் என் சிறுவயதில்-ஊர் பெரியதாக இருந்தாலும், அந்தக் காலத்தில் 1920-க்கு முன் அரசாங்கப் பள்ளி இல்லாத காரணத்தால் தனிப்பட்ட ஒர் ஆசிரியரிடம் தான் பயின்றேன். பின் மூன்றாவது வகுப்பு வந்தபோது பள்ளிக்கூடம் வந்தது. அதுவும் காந்தி அடிகள் கூறியது போன்று, எளிய ஒலைவேய்ந்த கூரைக் கட்டடம்-மண்சுவர் -மரச்சன்னல்தான். எனினும் அன்று ஆசிரியர்கள் நன்கு பிள்ளைகளுக்குக் கல்வி மட்டுமின்றி, கலை, சமூகவியல் போன்றவற்றையும் கற்றுத்தந்தனர். என் ஊரில் ஐந்தாம் வகுப்பு பயின்றபோது அல்லி அர்ச்சுனா என்ற நாடகத்தில் நான் கிருஷ்ணனாக நடித்தது மட்டுமின்றி, அன்று பாடிய பாடல்களும் அப்படியே இன்றும் நினைவில் உள்ளன. எனவே ஊர்தொறும் பள்ளி அமைப்பதில்-அதிலும் குறைந்த செலவில் அமைப்பதில் அதிக கடினம் இல்லை. பழங்காலத்தில் இதைத் திண்ணைப் பள்ளிக்கூடம் என்பார்கள். ஆம்! அப்பள்ளிகளில் அவ்வூர்ப் பிள்ளைகள் அனைவருமே ஐந்தாம் வகுப்பு வரையில் நன்கு படிப்பார்கள். பின் சிலர் மேல் வகுப்பில் சேரப் பேரூர்களுக்கும் நகரங்களுக்கும் செல்ல, சிலர், ஊரில் பெற்றோருடன் தொழில் செய்வர். எப்படியும் ஐந்தாம் வகுப்பு வரை அனைவரும்-பெரும்பாலும் 100-க்கு 80 பேரவது படித்திருப்பர். வேலைக்குப் போகும் பிள்ளைகளுக்கும் நான் முன்னரே சுட்டியபடி விடியற்காலை 5மணிக்கு முறையம் சொல்லும் வகையில் ஆத்திசூடி தொடங்கி சதகங்கள் வரையிலும் வாய்பாடுகளில் கீழ்வாய் இலக்கம் வரையிலும் கற்றுக்கொடுப்பார்கள். அதனால்தான் அந்த நாளில் எங்கோ ஓரிரு இட்ங்கள் தவிர்த்து, எல்லா இடங்களிலும் ஊரில் ஒற்றுமையும் எந்த வகையிலும் வேறுபாடு காண முடியாத ஒருமைப்பாடும் நிலவிய தன்மையினைக் காண முடிந்தது. வரலாற்று. அடிப்படையில் நெடுங்காலத்துக்கு