பக்கம்:கல்வி எனும் கண்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

கல்வி எனும் கண்



உண்டு வேண்டியவர்-வேண்டாதவர் என்று காணாது உண்மையில் தொண்டு செய்பவர்களை ஊக்குவித்து அரசாங்கம் கல்வியை வளர்க்க வேண்டும் ஊர்தோறும் முதியோர் கல்லிக்காக ஆரம்பப் பள்ளியினை ஒத்து, எழுத்தும் எண்ணும் சொல்லிக்கொடுத்து வயதுவந்தோரை ஓரளவாவது கற்றவராக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தும் அச்செலவுக்கு ஏற்ற பயன் விளையவில்லை என அரசாங்கத்தாரே சொல்லுகின்றனர். எல்லாவற்றிற்கும் கையூட்டு இல்லாத திட்டமான மேற்பார்வை முறை அமையின் கல்விமட்டுமன்றி, நாட்டில் எல்லாத்துறைகளும் நன்கு அமையும். அந்த ஆக்கநெறிக்கு இன்று நாடாளும் நல்லவர்க்ள் வழிவகுத்து முயலவேண்டும் எனக்கேட்டுக் கொள்ளுகிறேன். -

அண்மையில் தில்லியில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் (25-9-91-28-9.91) நாடுகளில் ஆரம்பப் பள்ளியில் கல்வியின் தரம் மிகக் கீழ்நோக்கிச் சென்றுள்ளது எனக் காட்டியுள்ளது. (The Hindu 29.9.91 P. 20) இந்தியாவும் ஒரு காமன்வெல்த் நாடுதானே! பள்ளியில் சேரும் மாணவர் எண்ணிக்கை வளர்ந்துவிட்டது என்றாலும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தரம் மிகத் தாழ்ந்துள்ளதைக் குறித்துள்ளனர். இது பிற மேல் படிப்புகளையும் பாதித்துள்ளதையும் சுட்டிக்காட்ட அவர்கள் தவறவில்லை. 10க்கு 8 பேர் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தாலும் அவருள் பாதிபேர் உயர்நிலைப்பள்ளியை எட்டிப் பார்ப்பதில்லை என்பதைச் சுட்டி, சமுதாய வளர்ச்சி அங்கே தடைப்படுவதையும் நினைவு படுத்தியுள்ளனர். -

ஆரம்பப் பள்ளிகளின் சீர்கேடுகளை - இடமின்மை, கட்டடம் இன்மை, பாடநூல்கள் இன்மை, தகுதி வாய்ந்த ஆசிரியர் இன்மை போன்றவற்றையும் அவர்கள் குறித்துள்ளனர். மக்கள் தொகைப் பெருக்கத்தினால் பள்ளிகள் வளர்ச்சி அடைய, அதை நிறைவேற்ற நிதி இல்லாநிலை உடைய நாடுகளும் எண்ணப்பெறுகின்றன. இந்த