பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

125



இல்லை’ என்னும் பழமொழி ஒன்றுன்டு. இதில் ஒரளவு விதி விலக்கும் இருக்கலாம். செல்வமும் வறுமையும் நிலையானவை அல்ல - வண்டிக் கால்கள் போல் மாறி மாறி வரலாம். இந்தக் கருத்தை நறுந்தொகை என்னும் நூல் விரிவாக விளக்குகின்றது. வருமாறு:

“உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா” (49)
“குடைநிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்க்தோர்
நடைமெலிந்து ஒரூர் கண்ணினும் கண்ணுவர் (50)
“சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக் கூழ்ச் சாலை அடையினும் அடைவர்” (51)
“அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோ டிருந்து அரசாளினும் ஆள்வர்” (52)
“குன்றத்தனை இரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்” (33)
“எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக்
கழுதை மேய் பாழாயினும் ஆகும்” (54)
“பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி
நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்” (55)

பட்டறிந்து எழுதிய இக்கருத்துகளின் உண்மையை இந்தக் கால நாடாளும் தலைவர்களிடமும் காணலாம்; தனி மாந்தரின் வாழ்க்கையிலும் காணலாம்.

இந்தக் கருத்துகள் நாலடியாரில் செல்வம் நிலையாமை என்னும் பகுதியிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவை:

“அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கி உண்டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனில் செல்வ மொன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று” (6.1)