பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

மனத்தின் தோற்றம்



குலோத்துங்க சோழன் உலா

“வண்முல்லை சூடுவதே நலங்காண் குலமாதருக்கே” (168)

காளத்திப் புராணம்

“முல்லை சால்மனை உலோபா முத்திரை” (பொன்முகரி-21)

பெரிய புராணம்

“கற்புவளர் கொடியே யனைய மனைவியார்” (3369)

இன்ன பிற.

கற்புக்கும் முல்லைக்கும் உள்ள தொடர்பு குறித்து திவாகர நிகண்டும் ஆசிரிய நிகண்டும் முல்லைக்குக் கற்பு என்னும் பெயரும் உண்டெனக் கூறியுள்ளன. முறையே அவை. வருமாறு:

“மெளவலும் தளவமும் கற்பும் முல்லை” (தி.நி. 4.197)
“மெளவல் ஊதிகை தளவு கற்பு மாகதியென
வழங்கு பெயர் முல்லையாகும்” (ஆ.நி. 137)

அகப்பொருள் இலக்கணப்படி நோக்கின், முல்லையின் உரிப்பொருளாவது, தலைவன் பிரிந்திருந்த காலத்தில் தலைவி பெரும் பண்புடன் ஆற்றியிருத்தலாகும். குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் ஆகியவற்றிற்கு உரிய புணர்தல் ஊடல், பிரிதல், இரங்கி வருந்தல் என்னும் உரிப்பொருள் களினும் முல்லையின் உரிப்பொருளாகிய ஆற்றியிருத்தலே கற்புடைமைக்குச் சிறந்த தகுதியாகும். அதனாறும் கற்பு முல்லை எனப்பட்டது.

இதுகாறும் கூறியவற்றால் கிடைத்த - சிறந்த கற்புடைய மகளிர்க்கும் முல்லைக்கும் உள்ள தொடர்பை அடிப்படையாகக் கெண்ேடு பிரபுலிங்க லீலைக்கு வருவோம்.