பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

157



“உயிர் எனும் பெயர் இயங்குகாற்கு இயற்பெயர் உரைப்பின்
அயலுறுந் தனக்கு அப்பெயர் ஆகுபெயராம்” (19-38)

என்பது பாடல் பகுதி. உயிர் என்னும் பெயர், மூச்சுக் காற்றுக்கு உரிய இயற்பெயராம் - ஆன்மாவிற்கு ஆகு பெயராம். இது பற்றி மெய்யறி வாய்வாளரிடம் கருத்து வேற்றுமை இருக்கலாம். தனக்கு - ஆன்மாவிற்கு உயிர்ப்பது (மூச்சு விடுவது) உயிர்.

இப்பாடவில் உள்ள ‘காற்கு’ என்னும் சொல், கால் என்பது ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபு பெற்ற சொல்லாகும். கால் + கு = காற்கு. ‘காற்கு’ என்றால் காற்றுக்கு என்று பொருளாம். ‘காற்கு’ என்பதற்கு முன்னால் இயங்கு என்னும் சொல் சேர்ந்து ‘இயங்கு காற்கு’ என்றுள்ளது.

காற்று எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது. கால் என்னும் தமிழ்ச் சொல்லுக்கும், வாயு என்னும் வட மொழிச் சொல்லுக்கும் பொருள் இஃதே. காற்று உலவிக் கொண்டே இருப்பதால், திவாகர நிகண்டில் காற்றுக்கு உலவை என்னும் பெயர் தரப்பட்டுள்ளது (1-37). காற்று எப்போதும் சரித்துக் கொண்டே (இயங்கிக்கொண்டே) இருப்பதால் ‘சாரிகை’ என்னும் பெயரும், சதா சென்று கொண்டே இருப்பதால் ‘சதார கதி’ என்னும் பெயரும் சூடாமணி நிகண்டில் காற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

10. பிற துறைகள்

மருத்துவம், சோதிடம், தருக்கம் முதலிய துறைகளும் பிரபுலிங்க லீலையில் இடம் பெற்றுள்ளன.

10.1 மருத்துவம்

ஆவிற்கு (பகவுக்கு) நோய் வரின், அதன் பாலையே கறந்து அதற்கு ஊட்டினால் நோய் நீங்குமாம். பாடல்: