பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

161



2. ஒருவரிடம், அன்பைக் காட்டிலும், தமது உயரிய பண்பைக் கண்டு மதிக்கும் முறையில் அவர் அஞ்சி ஒழுகும் படி நடந்து கொள்ளுதல் சிறந்தது.

3. கல்வியில் பெரிய மேதையாய் வல்லமை பெற்று இருப்பதைக் காட்டிலும், கற்றவரைக்கும் மறவாமல் அதன்படி ஒழுகுதல் சிறந்தது.

4. வளமான செல்வம் உடைமையைவிட, உண்மை யான (முறை தவறாத) வாழ்வு உடைமை சிறந்தது.

5. நோயோடு கூடிய இளமையைவிட, நோயின்றி ஒரளவு முதுமை இருப்பினும் அது நல்லது.

6. எல்லாச் செல்வ நலன்களைக் காட்டிலும், நாணமும் மானமும் உடைய வாழ்க்கை சிறந்தது.

7. உயர் குலத்தோர் என்னும் பெருமையினும், கற்புகல்வி உடையவர் என்னும் பெருமை சிறந்தது.

8. ஒருவர் தாம் கற்பது போதாது; கற்றவர்களைப் போற்றி வழிபடுதல் சிறந்தது.

9. பகைவரை ஒறுத்தலைவிட (தண்டித்தலைவிட), அவரினும் தம்மை உயர்ந்தவராக்கிக் காட்டுதல் சிறந்தது.

10. முன்னால் ஆரவாரமாக வாழ்ந்து வளம் குன்றிப் போவதினும், பின்னால் நிலைமை குறையாமல் நிறையுடன் வாழ்தல் சிறந்தது.

2. அறியத் தக்க பத்துக் கருத்துகள்

1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள் யாவரா யினும், அவருடைய குளிர்ந்த அருளுடைமையைக் கொண்டு தான் அவர் உயர் குலத்தார் என அறியப்படுவார்.

2. ஒருவர் பிறர்க்கு அளிக்கும் கொடையைக் கொண்டு அவர் குளிர்ந்த அருளுடையவர் என்பதை அறியலாம்.