பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மனத்தின் தோற்றம்



சிரித்தாலும் சிரிக்குமாம் - அல்லது கவலையால் கண்ணிர் சொரிந்தாலும் சொரியுமாம். எவ்வளவு கற்பனையான பாடல் இறுதிப் பாடல் இரு பொருள் (சிலேடை) நிறைந்தது. கண்ணிர் = கள் நீர் = தேன்.

சூரியகாந்திப் பூவுக்கும், தாமரை மலருக்கும் கதிரவ னைக் கணவனாகக் கூறும் மரபு உண்டென்பது மேற்கூறிய பாடல்களால் புலனாகும். மேலும், கச்சியப்ப முனிவர் கந்தபுராணத்தில்,

“சகட சக்கரத் தாமரை நாயகன்”

என்றும், சிவப்பிரகாச முனிவர் திருவெங்கை யுலாவில்,

“செந்தாமரை நாதன் தேரில் பதாகையோடு
நந்தா மதிற் கொடிகள் நட்பாட”

என்றும் கூறியிருப்பதிலிருந்து, கதிரவனுக்கு, ‘தாமரை நாயகன்’, ‘தாமரை நாதன்’ என்னும் பெயர்கள் உள வாதலும் அறியப்பெறும். நாயகன் - நாதன் என்றால் கணவன்தானே!

நம் புலவர்கள் திங்களை மட்டும் விட்டு வைத்தார்களா என்ன! குமுத (ஆம்பல்) மலரின் கணவனாக மதியத்தைக் கூறி வைத்தார்கள். இதனை,

"ஆம்பல் களிகூர வரும் வெண்ணிலாவே-உனக்கு
அம்புயம் செய் தீங் கெதுவோ வெண்ணிலாவே!”

என்னும் தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடலாலும்,

“காமக் கருத்தாக் குமுத நாதன்
கங்குல் வரக் கண்டும்”

என்னும் தனிப்பாடல் திரட்டுச் செய்யுளாலும் உணரலாம். திங்கள் குமுத நாதனாம் - ஆம்பலின் கணவனாம்!

ஆனால் உண்மையில் ஞாயிறும் திங்களும் மலர்களின் கணவன்மார்களாக முடியுமா? முடியாதே! கதிரொளி