பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

49



அகராதியின் முன்னுரையில் பின்வரும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

“தமிழ்ச் சொற்கள் முதல் முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலிகளை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படும் கருத்துகள் மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப்படையாகும். எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே உலகமொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவம் கொண்டன என்பது புலப்படும்”.

மேலே இது காறுங் கூறியவற்றால், “நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்” என்று கம்பர் கூறியுள்ளமை முற்றிலும் பொருந்தும் என்பது பெறப்படும்.

அகத்தியன் கடலை உண்டவன் - வாதவியை வயிற்றில் அடக்கிச் செரிக்கச் செய்தவன் - விந்த மலையைக் கீழே ஆழ்த்தியவன் - என்றெல்லாம் அறிவித்த பெருமை போதாது என்று, மீண்டும் தமிழ் வாயிலாக அகத்தியனுக்கு ஒரு சிறப்புக் கூறுகிறார் கம்பர். அதாவது:-

உயர் தமிழ்

உலக வழக்கு, செய்யுள் வழக்கு ஆகிய இரு வழக்கு களையும் ஒட்டித் தமிழ் இலக்கணம் அளித்தானாம் அகத்தியன். அந்தத் தமிழ் முதல் முதல் சிவனால் தனக்குக் (அகத்தியனுக்கு) கற்றுக் கொடுக்கப்பட்டதாம். மேலும் அந்தத் தமிழ், வலிந்து கற்கும் நான்கு வடமொழி வேதங்களினும் உயர்ந்ததாம்.

“உழக்கு மறைநாலினும் உயர்ந்து உலகம் ஓதும் வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி நிழல்பொலி கணிச்சிமணி நெற்றி உமிழ் செங்கண் தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்” (41)