பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மனத்தின் தோற்றம்


ஒடக்காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
போடக்காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து”

தெரியுமா அம்மே என்றாள்.

ஒர் ஆண்டுக்கும் மூன்று மழை காணமுடியாத நமக்குத் திங்கள் மூன்றுமழை பெய்ததாக ஏட்டிலாயினும் கண்டு இன்புறும் வாய்ப்புக் கிடைத்ததே இந்நாடகத்தால்!

இந்த விதமாகக் குறவஞ்சி மலைவளம், நாட்டுவளம், ஊர்வளம் கூறிக் குற்றாலநாதரின் சிறப்பையும் சிறிது செப்பினாள். கேட்டுப் பதைபதைக்கும் வசந்தவல்லி, "ஏ நங்காய்! நீ நன்றாகக் குறி சொல்லுவாயா' என்றாள். உடனே குறவஞ்சி ஒ அம்மே! பாரம்மே! மதுரையில் மீனாட்சியின் மணத்திற்குக் குறி சொல்லியவர்களும்.எங்கள் குலத்தார்களே! நானும் அப்படித்தான்!

“வஞ்சி மலைநாடு கொச்சி கொங்கு
மக்க மராடங் துலுக்கான மெச்சி
செஞ்சி வடகாசி நீளம் சீனம்
சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம்
தஞ்சை சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச்
சங்க மதுரைதென் மங்கலப் பேட்டை
மிஞ்சு குறி சொல்லிப் பேராய்த் திசை
வென்றுநான் பெற்ற..விருதுகள், பாராய்”

என்று தன் சுற்றுப்பயணத்தையும், குறி சொல்லித் தான் பெற்ற வெற்றி விருதுகளையும் வெளிப்படுத்தினாள்.

சுற்றுப் பயணத்தால் அறிவு வளர்ச்சியும் ஆற்றலும் உண்டாகும் என்பதற்கு இக்குறப்பெண் சான்று என்பதை எவரும் மறந்துவிட முடியாது. ‘பல ஊர்த் தண்ணிர் குடித்தவர்’ என்பது முதுமொழியாயிற்றே.