சீனத்தின் குரல்/மற்றோர் குடியாட்சி

விக்கிமூலம் இலிருந்து
மற்றோர் குடியாட்சி

1932-ல் Hein Bing ஹெய்ன்-பிங் குடியரசை ஸ்தாபித்துவிட்டார்கள். அதில் சீன ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் அடங்கியிருந்தார்கள். இந்த நேரத்தில் தான் Civil War உள் நாட்டுப்போர் தொடங்கிவிட்டது. இதை சாதகமாக்கிக்கொண்டு, கிடைத்ததை சுருட்டுவோம் என்று ஜப்பான் சைனாவின் மேல் படையெடுத்து மஞ்சூரியாவைப் பிடித்துக்கொண்டது. ஜப்பான் சர்க்காருடைய இந்த அடாத செயலைக் கண்டித்து தாம். இழந்த மஞ்சூரியாவைத் திருப்பித்தர உத்திரவிட வேண்டுமென்று சைனா சர்வதேச சங்கத்துக்கு மனுச் செய்துகொண்டது,