பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்று

ழுெட்டுக் குடிசைகளில், கடைசியில் உள்ள ஒரு பொத்தற் குடிசையின் பின்புறமாக மண்ணாங்கட்டி நின்று, பொத்தற் குடிசையின் உள்ளே பார்க்கிறான். இரக்கம் கொள்ளுகிறன், தன் வீட்டுச் சாவியையும் தான் எழுதிய தாளையும் குடிசையின் உள்ளே போட்டுச் சிறிது தொலைவில் சென்று ஓர் மரத்தடியில் நிற்கிறான், பொத்தற் குடிசையைப் பார்த்தபடி!

பொத்தற் குடிசையின் உள்ளே இருந்து ஒருவன், தன் கையில் சாவியுடனும், மண்ணாங்கட்டி எறிந்த ஏட்டுடனும் வெளி வருகிறான். அவன் மற்றும் ஒரு முறை ஏட்டைப் படிக்கிறான். அவன் கண்கள் வியப்பில் ஆழ்கின்றன. அவன் மகிழ்ச்சியால் விரைவாக மண்ணாங்கட்டியின் வீட்டைத் திறக்கிறான், சுற்றிலும் பார்க்கிறான். மீண்டும் கதவைப் பூட்டிக்கொண்டு தன் பொத்தற் குடிசையை அடைகிறன். உடனே அவனும் மற்றொருத்தியும் பொத்தற் குடிசையிலிருந்த தட்டு முட்டுக்களுடன் மண்ணாங்கட்டியின் வீட்டை அடைகிறார்கள். இவற்றை மண்ணாங்கட்டி கண்டு உள்ளம் பூரித்துச் செல்லுகிறான் ஊரின் புறத்தே.

5