பக்கம்:அழியா அழகு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் சீற்றம் 10??

உறவினரும் பகைஞரும் இருந்தனர். அவன் இராமனுடைய அன்புக்கு ஆளான பிறகு அவன் கலந்தீமைகள் இராமைேடு இணைந்தே அமைந்து விட்டன. இராமனுக்கு நண்பர்கள் அவன் நண்பர்கள்: இராமனுக்குப் பகைவர்கள் அவன் Llడు)& Qt &6F

குகன் இராமனிடம் அன்பு உள்ளவன் ஆகிவிட்டதல்ை பரதனேக் கண்டு சினக்கிருன். அவன் உணர்ச்சி வசப்படுப வன் ஆதலால் ஆற அமர யோசித்துத் தெளியும் இயல்பு அவனிடம் இருக்கவில்லே. ஆகவே, பரதன் ஏன் அப்படிப் படையெடுத்துவர வேண்டும் என்று யோசிக்கவில்லே. பரதனும் இராமனிடம் அன்புடையவன்; குகனும் அத்தகைய வன்தான். ஆனல் குகன் பரதனுடைய அன்பை உணர வில்லை.

ஒரு வீட்டில் ஒரு பசு கன்றை ஈன்றிருக்கிறது. அந்த வீட்டுக்கு அயலூரிலிருந்து ஒரு முதியவர் வங். திருக்கிருர். அவருக்கு வீட்டுக்காரன் புதிதாக ஈன்ற கன்றையும் பசுவையும் காட்டுகிருன். முதியவர் பசு வின் இயல்பை உணர்ந்தவ ராகையால், கன்றுக்குட்டிசேய்ம்பாலே அதிகமாக ஊட்ட விடக் கூடாது என்று சொல்கிருர், வடிகஞ்சியைக் கொடுக்கலாம் என்றும் யோசனை சொல்கிருர், ஒரு மூங்கி லே இரண்டாக, வெட்டி அதன் நுனியை மூக்குடையதாக்கிக் கன்றுக் குட்டிக்குக் கஞ்சியூட்டும் பாலோடைபோலச் செய்கி ருர். கஞ்சியும் மூங்கிலுமாக அவரே கன்றுக்குட்டிக்கு, ஊட்டச் செல்கிருர். அப்போது பசுமாடு அவரை முட்டவருகிறது. அந்தக் கிழவர் கன்றின்மேல் உள்ள அன்பினல் கஞ்சி ஊட்டச் செல்கிருர். பசுவும் கன்றின் மேல் உள்ள அன்பில்ைதான் முட்டவருகிறது. ஓர் அன்பை மற்ருேர் அன்பு உணர்ந்து கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/115&oldid=523317" இலிருந்து மீள்விக்கப்பட்டது