உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

தமிழர் பண்பாடு


இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்; அரவின்
ஈரளைப் புற்றம் காரென முற்றி,
இரைதேர் எண்கு இனம் அகழும்
வரைசேர் சிறுநெறி, வாரா தீமே;”
                    - நற்றிணை : 336

ஆற்றுப்பள்ளத்தாக்கில்

ஆற்றுப் பள்ளத்தாக்கு நிலத்தில் எழுந்த ஒரு பாடல்:

"பொய்கையின் மீன் தேர்ந்துண்ட நாரைகள், நெற்கதிர்ப்பு போரில் சென்று உறங்கும். நெய்தல் வருமளவு வளத்தால் அழகு பெற்ற வயலில், நெல் அறுவடை செய்யும் உழவர், முகை அவிழ்ந்து மலர்ந்த இதழ்களையுடைய ஆம்பலின் அகன்ற இலையாலான தொன்னையில், மதுவுண்டு, தெளிந்த கடலலை எழுப்பும் சீரான ஒலிகளின் தாளத்திற்கு ஏற்ப ஆடி மகிழும், நன்செய் வளமிக்க நாட்டிற்கு உரிய வேந்தே பழம் : உண்ணுவான் விரும்பி, ஆகாயத்தில் உயரப் பறந்து, மலைக் குகைகள் எதிரொலிக்கப் பேரோலி எழுப்பியவாறே சென்று, ஆங்குள்ள பழமரங்கள், பருவம் கழிந்து போகக், காய்ப்பு மாறிவிட்டது கண்டு ஏமாந்து, வருந்தி, வறிதே மீளும் பறவகைளைப் போல, வருவார்க்கு வரையாது வழங்குவன் என்ற உன் புகழ்துரத்த வந்து, உன் புகழ்பாடும் நான், வறிதே மீளக் கடவனோ ?”

"பொய்கை நாரை, போர்வில் சேக்கும்
நெய்தலம் கழனி நெல்லரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகலடை அரியல் மாந்தித் தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருன!
பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து,
பெருமலை விடரகம் சிலம்ப முன்னிப்,
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப்
பெறாது பெயரும் புள்ளினம் போல,
நின் நசைதர வந்து, நின் இசைநுவல் பரிசிலேன்