பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பச்சைப் பசுங்கிளியே! வா!வா!
பாலும் பழமருந்த வா!வா!
உச்சி மரத்தைவிட்டு வா!வா!
உயரப் பறந்துகத்தி வா!வா!


மூக்குச் சிவந்தபச்சைக் கிளியே!
முத்தம் பலதருவேன்! வா!வா!
தேக்கு மரத்(து)ஊஞ்சல் ஏறிச்
சிரித்துக் குதித்திடுவோம்! வா!வா!


கூண்டில் அடைக்கமாட்டேன்! வா!வா!'
கோவைப் பழந்தருவேன்! வா!வா!
வேண்டும் பொழுதோடு! வா!வா!
விளையாடு வோம்விரைந்தே! வா!வா!

16