xviii
பேராசிரியர்
பேராசிரியர் ஒரியலுக்கும் அடுத்துவரும் இயலுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். ஒரு நூற்பாவுக்கும் அடுத்துவரும் நூற்பாவுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டுகிறார். ஒரே நூற்பாவில் வரும் செய்திகளின் முறைவைப்பையும் உன்னிப்பாக எண்ணி எழுதுகிறார் (பக். 106).
மறுப்புக் கூறுதல் பேராசிரியர் உரையில் தனிச் சிறப்புடையது. மிக விரிவாக ஆய்ந்து படிப்படியாக விலக்கியும் விளக்கியும் மறுத்து ஆசிரியர் கோளை நிலை நாட்டல் அவர்தம் முறைமை (பக்.111).
நச்சினார்க்கினியர்
வலிந்தும் நலிந்தும் சில இடங்களில் இவர் கூறியுள்ள உரை, ஆசிரியர் நூலுக்கும் தமிழர் நெறிக்கும் ஒவ்வாது (பக். 124).
தெய்வச் சிலையார்
(தொல்காப்பியச் சொல்லதிகார) நூற்பாக்களை இடப்பெயர்ச்சி செய்தாருள் முதல்வரெனத் தெய்வச் சிலையார் அமைந்து விடுகின்றார் (பக். 141).
அரிய செய்திகளையும் எடுத்துக்காட்டு நயங்களையும் உடையது, தெவ்வச்சிலையார் உரை (பக். 144).
இறையனார் களவியல் உர
நூலால் உரையும் உரையால் நூலும் ஒன்றை ஒன்று ஒப்பச் சிறப்புறும் என்பதற்கு இறையனார் களவியல் உரை சீரிய எடுத்துக்காட்டாம் (பக். 180).
யாப்பருங்கல விருத்தியுர
விருத்தியுரைகாரர் பல்கலைக்கு மிசில்; பேரறிஞர்; தயத்தக்க உரையாளர், சீரிய நினைவாளர்; நாடு கண்டவர் வரலாற்றுத் தெளிவானர்: பட்டறிவால் முதிர்ந்தவர்; சமயப் பொறையாளர்; சால்பாளர். (பக். 24).
தமிழ் யாப்பிலக்கணப் பரப்பைக் கடலெனப் பரப்பியும், மலையென உயர்த்தியும் காட்டவல்ல உரை, இவ்விருத்தியே (பக். 224).