இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதலி கடிதம்
'அன்னலை நான் மற்ருெருகால் காண்டேளுே? கண்டாலே பாக்கியமே' என்றே அரசுறையும் எழில் நகரம் தான் வந்தாள் : மன்னவனைக் கண்டாள்; மற்றவன் தன் வார்த்தை சொன்னுள்; "ஐயகோ அரசுப் பெருஞ்சுமைதான் உள்ளத்தில் மலையாகி உன் நினைவைத் தான் புதைத்து அறவே மறந்துவிட ஆக்கினதே!
மற்ருேர் இளமாதை
மணம் புரிந்த காலத்தும் உன்னை மறந்தேனே, ஐயையோ! பெண்மை அணிவிளக்கைப்
பெருந்துயரில் வைத்தேனே' என்றே துயர் உழந்தான்; கன்னியும் சோர்ந்தாள்; காதற் கடவுளுக்குக் காணிக்கையாய்ச் சேர்ந்தாள். உதயச் சுடர் நாட்டில் உற்ற அவலமிது:- காதல் மறதியிஞல் கன்னி உயிர் வாடுவதை இக்கதையிற் கண்டோம் என்கதையும் இதுதானே?
105