பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இளமையின் நினைவுகள் கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள் வீ ட் டு க் கு வருவார்கள் என்ருலும் அம்மா அவர்கள் வீட்டுக்குச் செல்வதில்லை என நினைக்கிறேன். இப்படி ஒரு சிறு நல்ல மாறுதல் குடும்பத்தில் ஏற்பட்ட காலத்தில்தான் அந்த நிலப் போட்டிச் சண்டை உண்டாயிற்று. . ஒரு பெரியவர் தம் மகனுக்கு நிரம்பப் பொருள் வருவாய்க்குத் தக்க வழியில் அதிக நிலங்களை வைத்து விட்டுச் சென்ருர், எங்கள் ஊரில் அவரே பெரிய பணக் காரர் என்னுமாறு அவர் வாழ்ந்து வந்தார். தந்தை இறக்கும் காலத்தில் அவர் கடன் இல்லாமல் இருந்தார். எனினும் தையலார் மையலிலே தாழ்ந்து விழ நேர்ந்த காரணத்தால் அவர் கடன்காரராக வேண்டி இருந்தது. நிலங்களையும் வீடு முதலியவற்றையும் விற்ருர். அந்த நிலத்தில் ஒரு பகுதி நெய்க்குப்பத்தில் இருந்தது. அதை முன்னமே சென்னையில் யாருக்கோ அடைமானமாகப் போட்டிருந்தார். அந்த நிலம் விற்பனையாகப் போகிறது என்று என் அன்னை யிடம் வந்து யாரோ சொன்னர்கள். அப்போது அப்பா வீட்டில் இருந்தபடியால் எப்படியாவது அதை வாங்கிவிட வேண்டும் என்று முயன்ருர், அம்மாவும் அதற்குச் சம்மதித் தார்கள். பாட்டி மட்டும் அதற்கு விரைவில் இடங்கொடுக்க வில்லை. உள்ளது போதாதா? என் இப்படி மேலும் மேலும் நிலத்தை வாங்குகிறீர்கள்? பயிரிடவோ முடியாது. இந் நிலையில் வாங்கித்தான் என்ன் செய்யப் போகிருேம்? வேண்டாம் என்ருர்கள். எ னி னு ம் அதுபற்றிப் பேச வந்திருந்த பெரியவர் அது நல்ல நிலம் என்றும், எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்றும் சொன்னர். அப்போது அம்மாவிடம் பணம் ஒன்றும் இல்லை. ஆனல் வந்தவர் சொன்ன சொல் உணர்ச்சி யூட்டியது. நிலம் அடைமானத் தில்உள்ளதென்றும், அந்த அடைமானப் பணத்தை அடுத்த