பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயக்குறாக் காதை

ரூரூ

கோலக் காட்சி கொடுத்தருள் புரிந்தனன்

இரவிடைக் கண்ட காட்சிதான் என்னே!
160

முருகன் அருளே அரு’ளென. மொழிந்தனர்;
கேட்ட துறவி, வேட்டது பெற்றோம்
போட்ட திட்டமும் பொய்த்தில தாகி
ஐயா யிரமும் மெய்யாம் என்று

செய்யான் அடிகளைச் சிந்தை செய்தனர்;
165

முருகனார் மகிழ்வை முகத்தான் உணர்ந்த
திருவினர் சிலசொல் செப்பினர் ‘ஐய,
உள்ளிய தொகையோ ஓரைந் தாயிரம்
வள்ளல் முருகன் காட்டிய வழியால்

மும்மடங் காகி நம்மிடம் வருமாம்
170

அம்முதல் பெற்றதும் அதிலொரு பங்கை
நீவிர் விழைந்த கோவில் எழுப்பவும்
மேவும் முருகனை நாளும் வழிபட
மற்றொரு பங்கை வழங்கவும் பணித்தனன்;

எஞ்சிய ஐந்தை இவண் எழும் நும்போல்
175

வஞ்சமில் லன்பர் வருவ ராயின்
அவர்தமக் குதவ அருளினன்; அதுகேட்
டுவகை மீக்கூர்ந் தொள்வேல் முருகா
அருட்பெருங் கடலே. ஆண்டவா நின்னுளக்

கருத்தினை முடிக்குங் கடப்பா டுடையேன்
180

ஆயினும் அடியேன் அத்தனைப் பெரும்பொருள்
ஈயும் நிலையில் இன்றிலேன் நின்றன்
ஆணையை எவ்வணம் ஆற்றுவேன்? என்னக்
காணும் வழியுங் காட்டினன் முருகன்’

என்ற மொழிகேட் டீடிலா மகிழ்வில்
185

ஒன்றிய உளத்தால் உறுதவ வேடர்