உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. உடற் செல்வம்

நல்வாழ்வுக்கு இன்றியமையாதது உடல் நலம். உடம்பைப் பெற்ற மக்கள் அதைப் பாதுகாக்க வேண்டுமென்பது அறிவைப் பெற்றவர்களின் கருத்து. “நோய் வராமல் தடுப்பவன் அறிஞன், வந்து தடுப்பவன் மனிதன்: வந்தும் தடுக்காதவன் பிணம்” என்பது புதுமொழி. மக்கள் முயன்றால் நோய் வராமல் தடுத்து வாழமுடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று உண்ணும் உணவிலும், உடலின் உழைப்பிலும் சிறிது கருத்தைச் செலுத்துவதுதான்.

“பனி அதிகமாயிருந்தால் வெளியில் தலை நீட்டாதே என்று புத்திமதி சொல்லும் பெற்றோரைப் பார்த்திருப்பீர்கள். ஏன்? பனி என்றால் அவ்வளவு பொல்லாததா? அல்லது பயங்கரமானதா? ஒன்றுமில்லை. நன்றாகப் பனியில் திரியலாம். மழையிலும் நனையலாம். காற்றிலும் அடிபடலாம், ஆனால், ஒன்று; நீங்கள் வெயிலிலும் காய்ந்திருக்க வேண்டும். நாள்தோறும் ஒரு மணிநேரம் வெயிலைத் தாங்கும் உடம்பு ஒரு மணி நேரம் பணியையும், ஒரு மணி நேரம் மழையையும் தாங்கும். வெயில்படாத குழந்தைகளின் உடம்பில், உடல் நலம் இளமையிலேயே இடிந்து குட்டிச்சுவராகிப் பிறகு மண்ணாகி, மறைவாகிப் போய்விடும்.

வெயிலில் நாள்தோறும் அலைகின்ற மக்களின் உடலைக் காற்றும் மழையும் கடும்பனியும் வளர்த்து வருகின்றன. இவ்வுண்மையைச் சிற்றூர் மக்களிடத்தே காணலாம். கடும் வெயிலிற் காடு திருத்தி, மண்வெட்டி,