165
பொங்கும் படை இரிய— (தசரத மன்னனின்) மிகப் பெரும் படையும் தனது தோற்றம் கண்டு அஞ்ச; கினர்புருவம்—மேல் எழுந்த புருவங்கள்; கடை தெரிய–சினத்தின் அறிகுறியாக கடைப்பக்கம் தெரியவும்; வெம் கண் பொறி சிதற–கொடிய கண்கள் தீப்பொறி சிந்தவும்; உறும் ஏறு என-பேரிடிபோல கடிது விடையா—விரைந்து முழங்கிக் கொண்டு; சிங்கம் எனவரு–ஆண் சிங்கம் போல வந்து கொண்டிருந்த; குமரன் எதிர்சென்றான்—இராமன் எதிரே சென்றான்; அங்கண்—அப்போது; அழகனும்–பேரழகினனாகிய இராமனும்; இங்கு இவன் ஆரோ—இப்படி இங்கே வருகிறவன் யாரோ; எனும் அளவில்—என்று எண்ணிய அளவில்.
xxxx
இற்றோடிய சிலையின் திறம்
அறிவேன் இனியான் உன்
பொற்றோள் வலி நிலை சோதனை
புரிவான் நசை உடையேன்
செற்றோடிய திரள் தோள்
உறு தினவும் சிறிது டையேன்
மற்றோர் பொருளிலை இங்கிதென்
வரவென்றனன் உரவோன்.
“தீ ஒடித்த வில்லின் தன்மை என்ன என்பதை நான் அறிவேன். அது சொத்தை வில். ஆதலின் உனது புயவலி காண வந்தேன். அரசர் பலரை வென்று உயர்ந்த எனது தோள்கள் தினவு கொண்டுள்ளன. உன்னுடன் போர் செய்ய வந்திருக்கிறேன்.” என்றான் பரசுராமன்.
xxxx