<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
அமரர் சக்திதாசன் சுப்பிரமணியன் அவர் தம் துணைவியார் திருமதி ஜலஜா சக்திதாசன் இருவரும் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத் தொண்டு ஆற்றியவர்கள். 1990-ம் ஆண்டிலே வெளியான அவர்களது திரு வி. க. உள்ளமும் உயர் நூல்களும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசு பெற்ற பெருமையுடையது.
இலக்கியமன்றி, அமரர் சக்திதாசன் சுப்பிரமணியன் 1933 முதல் 1983 வரை சிறந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர். திரு வி. க. வின் சீடரான இவர் தனியே எழுதிய நூல்கள் இருபத்தி ஆறு. திருமதி ஜலஜா சக்திதாசனுடன் சேர்ந்து எழுதிய நூல்கள் இருபது. திருமதி ஜலஜா சக்திதாசன் தனியாக எழுதிய நூல்கள் பதினாறு. இந்தத் தேசிய எழுத்தாளர்கள் எழுதிய ‘கம்பன் கவித்திரட்டில்’ முதல் காண்டம் - பாலகாண்டம் 1986-ல் வெளியிட்டோம்.
1990-ல் அயோத்தியா காண்டத்தையும் ஆரண்ய காண்டத்தையும் வெளியிட்டோம்.
1991-ல் மீதியுள்ள கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகியவற்றை வெளியிடுகிறோம்.
தமிழகம் எங்கள் வெளியீடுகளுக்குப் பேராதரவு அளிக்க வேண்டுகிறோம்.
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>