பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சயங்கொண்டார்


கலிங்கத்துப்பரணியைப் பாடிக் குலோத்துங்கன் புகழையும் அவன் தலைமைச் சேனாதிபதி கருணாகரத் தொண்டைமானின் பெருமையையும் இந்நிலவுலகில் என்றும் நிலை பெறச் செய்தவர் சயங்கொண்டார் என்ற புலவர் பெருமான். அவர் குலோத்துங்க சோழனின் அவைக்களத்தை அணி செய்த ஒப்பற்ற புலவர் மணி. அவர் கலிங்கத்துப் பரணியைப் பாட வேண்டிய சந்தர்ப்பத்தை முன்னர்க் குறிப்பிட்டோம்.[1] அவ்வரலாற்றை மெய்யெனக் கொண்டால் அவரது இயற்பெயர் ' சயங்கொண்டான் ’ என்ற பெயர் அன்று என்பது சொல்லாமலே போதரும்.

சயங்கொண்டாரது ஊர்,அவரது இயற்பெயர் இன்னது என்பது அறியக் கூடவில்லை. அது போலவே அவரது பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை வரலாறு முதலிய செய்திகளும் நன்கு புலப்படவில்லை. ஆனால்,

செய்யும் வினையும் இருளுண் பதுவும்
தேனும் நறவும் ஊனும் களவும்
பொய்யும் கொலையும் மறமும் தவிரப்
பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்


  1. இந்நூல்-பக்கம்-15