பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






அக்டோபர் 4


இறைவா, தவறுகளைத் தைரியமாக ஒப்புக் கொள்ளும் மனப்பான்மையைத் தந்தருள்க!


இறைவா! தாயிற் சிறந்த தயாவுடைய தலைவனே! என்னைப் "பயம்" என்ற இருட்டறையிலிருந்து மீட்டுக் காப்பாற்றியருள்க!

இறைவா, என் பயம் என்னைப் பேயாகப் படைத் தாட்டுகிறது! என்னுடைய பயம் எதையும் எதிர்மறையாகவே ஆராயத் துரண்டுகிறது! பயம் என்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்ற நிலையில்தான் நான் நல்லவனல்லன்.

இவன் நல்லவனல்லன். தோல்வி வரும். துன்பம் சூழும் என்றெல்லாம் நினைந்து நானே முடிவுகளையும் எடுத்துக் கொண்டு, அரண்ட நிலையில் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் ஏன் பயப்பட வேண்டும். பயம் மனிதனைக் கொன்றுவிடுகிறது. மனிதனின் ஆக்கத்தை அழிக்கிறது. சுற்றத்தை அழிக்கிறது. ஆதலால் பயத்திலிருந்து மீள்வதே என் முதல் பணி.

நான் பயத்தால் இழக்கும் இழப்பே மிகுதி பயத்திற்குப் பதிலாக நான் உண்மையுடன் வாழ்ந்தால் - தவறு நிகழ்ந்து விட்ட நிலையில் அதனை ஒத்துக் கொள்வதில் முன் நின்று மன்னிப்புக் கேட்டால் நான் பிழைத்து விடுவேனே! இறைவா, என்னைப் பயத்திலிருந்து மீட்டுக் காப்பாற்று!

தவறுகளுக்குக் காரணமாகிய அறியாமை, அகந்தையிலிருந்து காப்பாற்று! தவறுகள் நிகழ்ந்து விட்டால் தைரியமாகத் தவறுகளை ஒத்துக் கொள்ளும் மனப்பான்மையைத் தா!

தவறுகளை நினைத்து வருந்தி மன்னிப்புக் கேட்கும் இயல்பினைத் தா! இறைவா. என்னைப் பயத்திலிருந்து மீட்டு வீரம் செறிந்த வாழ்க்கையில் செலுத்தியருள்க! இறைவா, அருள் செய்க!