இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
264
இலை | : | இரண்டு சிற்றிலைகள் கொண்ட கூட்டிலை. இரண்டும் அடியில் ஒட்டியிருக்கும். |
இலைக்காம்பு | : | 15 மி.மீ. முதல் 22 மி.மீ.நீளமானது. |
சிற்றிலை | : | 6 செ. மீ. முதல் 8 செ. மீ. நீளம். 4.5 முதல் 6 செ.மீ. அகலம். |
இலை நரம்பு | : | கையன்ன விரி நரம்புகள் இலை நுனி வரையில். |
இலையடிச் செதில் | : | 2 சிறியவை, முதிரு முன்னர் உதிர்ந்து விடும். |
மஞ்சரி | : | நுனி வளர்ந்த பூந்துணர் உச்சியில் கலப்பு மஞ்சரியாக இருக்கும். |
மலர் | : | வெளிர் மஞ்சள் நிறமானது. ஐந்தடுக்கானது. இருபக்கச் சமச் சீரானது. பூவடிச் செதில்களும் பூவடிச் சிறு செதில்களும் உண்டு. |
புல்லி வட்டம் | : | ஐந்து பசிய மடல்கள் பற்கள் போன்றிருக்கும். |
அல்லி வட்டம் | : | 5 மடல்கள், சற்றுச் சமமில்லாமலிருக்கும். நேராகக் காணப்படும். திருகு இதழமைப்பு. |
மகரந்த வட்டம் | : | 5 மகரந்தத் தாள்கள், மகரந்தப் பைகள் சுழல் அமைப்புடையன. நீளவாக்கில் வெடிக்கும். |
சூலக வட்டம் | : | சூற்பை காம்புடனிருக்கும். பல சூல்களை உடையது. சூல்தண்டு குட்டையானது. இழை போன்றது. |
கனி | : | தட்டையானது: உட்புறம் தடுப்புகள் உடையது. |
விதை | : | முட்டை வடிவானது; முளை சூழ்தசை கொண்டது. |
இம்மரம். இந்தியாவில் பஞ்சாப் முதல் இலங்கை வரையில் வளர்கிறது.சீனா, மலேயா நாடுகளிலும் காணப்படுகிறது.